சென்னையில் மின்சாரம் தாக்கி வயதான தம்பதி அடுத்தடுத்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி மூர்த்தி தனது மனைவியுடன் வசித்து வந்தார். பானுமதியும் தடய அறிவியல் துறையில் துணை கண்காணிப்பாராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் வயதான காலத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மூர்த்தி மற்றும் அவருடைய மனைவி பானுமதி வீட்டின் இரும்பு கேட்டை பிடித்தபடி இறந்து கிடந்துள்ளனர்.
எதிர்வீட்டில் வசித்து வந்த வெங்கடராமன் என்பவர் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அங்கு சென்று கேட்டை தொட்டபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. எனினும் சுதாரித்துக் கொண்ட அவர் உடனடியாக மின்சார இணைப்பை துண்டித்து விட்டு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் சடலத்தையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி வயதான தம்பதி ஒன்றாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…