Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

'ஒரு ரூபாய்க்கு ஒரு வேளை சாப்பாடு' - உணவகத்தில் குவியும் மக்கள்..!!

Nandhinipriya Ganeshan September 05, 2022 & 18:50 [IST]
'ஒரு ரூபாய்க்கு ஒரு வேளை சாப்பாடு' - உணவகத்தில் குவியும் மக்கள்..!!Representative Image.

இன்றைக்கு விற்கும் விலைவாசிக்கு ஒரு ரூபாய்க்கு ஒருவேளை சாப்பாடு என்பது சாத்தியமே இல்லை. இருப்பினும் ஈரோட்டை சேர்ந்த வெங்கட்ராமன் 15 வருடங்களாக இந்த சேவையை செய்து வருகிறார். உண்மையில், சற்று சிந்திக்க வேண்டிய விஷயமாக தான் இருக்கிறது. 

இது குறித்து பேசிய உணவகத்தின் உரிமையாளர் வெங்கட்ராமன், 'என்ன தான் விலை வாசி அதிகமாக இருந்தாலும், மனசு இருந்தா எதுவும் செய்யலாம். நாங்கள் ஒன்றும் தனியாக இவர்களுக்காக சமைக்கவில்லை. ஹோட்டல் வேலைக்கு ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சமைக்கும்போதே சேர்த்துச் சமைக்கிறோம். பொருளாதார ரீதியா கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது. இருப்பினும், சமாளித்து வருகிறோம்' என்கிறார். 

இதை கேட்ட அனைவருக்குமே முதல் கேள்வி இந்த ஹோட்டல் எங்கிருக்கிறது என்பது தான். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அருகே இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் மூலம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள், ஏழை எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். 

முதலில் தினம் 10 பேருக்கு சாப்பாடு போடத் தொடங்கிய இந்த ஹோட்டல், இன்று தினமும் 60 பேருக்கு உணவளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில், இந்த தனி மனிதரின் சேவைப் பாராட்டுக்குரியது என்று நமது முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பாராட்டியுள்ளது. 

"உதவி செய்ய காசுப் பணம் முக்கியமில்ல, நல்ல மனசு இருந்தால் போதும்" என்பதை உணர்த்தியிருக்கிறார் வெங்கட்ராமன்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்