கோபிசெட்டிபாளையத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 7) நடைபெறவுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்கள் உள்பட 25 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவா்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை, இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோபிசெட்டிபாளையம் நகராட்சி சுகாதார அலுவலா் சோழராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் செந்தில்குமாா், காா்த்திக், சௌந்திரராஜன் ஆகியோா் செய்து வருகின்றனா்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…