ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியினை ஏற்றுவதற்காக இலவசமாக வீடு தோறும் கொடி வழங்கும் திட்டத்திற்க்கு நிதி சேகரிக்கப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் நகர் பகுதியில் மட்டும் உள்ளா பல்வேறு அமைப்புகள் மூலமாக 1 லட்சம் ரூபாய் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நகராட்சி அலுவலர்கள் தங்கள் பங்களிப்பாக 75 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். மேலும், தொடந்து நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த நிதியை வைத்து 18 ஆயிரம் கொடிகள் அச்சிடப்பட்டு நகராட்சி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. அதன்படி, இக்கொடியினை ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அலுவலரிடம் கொடிகளை வழங்கினார்.
இதனையடுத்து, நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வீடுகள் தோறும் தேசியக்கொடியை இலவசமாக வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
அதன்படி, நகராட்சி துப்புரவு அலுவலர், நகரமைப்பு அலுவலர், உதவி பொறியாளர்கள், ராஜேஷ், மேலாளர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் தேசிய கொடியினை வீடுகள் தோறும் வழங்க உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…