Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Virudhunagar News : பட்டாசு ஆலைகளில் இரவு நேர பணி வேண்டாம்.. மாவட்ட ஆட்சியர்..

Muthu Kumar June 28, 2022 & 13:30 [IST]
Virudhunagar News : பட்டாசு ஆலைகளில் இரவு நேர பணி வேண்டாம்.. மாவட்ட ஆட்சியர்..Representative Image.

Virudhunagar News : விருதுநகரில் செயல்படும் பட்டாசு ஆலைகளில்  இரவு நேர பணிகளில் ஈடுபடும்  இரவு நேர பணிகளில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில், அடுத்த சில மாதங்களில் தீபாவளி உள்ளிட்ட பல பண்டிகைகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பட்டாசு உற்பத்தி தீவிரமடைய தொடங்கியுள்ளது. விருதுநகர் மாவட்ட்டத்தில் குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிற்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, சில பட்டாசு ஆலைகளில் இரவு நேரங்களிலும் பணி நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இரவு நேரங்களில் தூக்க கலக்கத்தில் சிறிது தவறு நடந்தாலும் விபத்து நடக்க வாய்ப்பு இருப்பதால் இரவு நேர பணிகள் கூடாது என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இதை மீறி இரவு நேர பட்டாசு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டால் ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்