சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்ம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதம்தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று வழபாடு செய்வார்கள்.
இந்நிலையில், தற்போது பிரதோஷம் மற்றும் அமாவசை வருவதையொட்டி இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்து வனத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, காலை 6 மணி முதல் 11 மணி வரை மலையேற்றத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், நான்கு நாட்களில் மழை பெய்யும் பட்சத்தில் பயண அனுமதி தடை செய்யப்படும். மேலும், இரவில் மலையில் தங்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…