Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Madurai News Tamil : மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் பலி..! விவசாயி படுகாயம்..!

Muthu Kumar May 16, 2022 & 14:46 [IST]
Madurai News Tamil : மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் பலி..! விவசாயி படுகாயம்..!Representative Image.

Madurai News Tamil : மதுரை மாவட்டம் மேலூர் அருகே மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் பலி. மேலும் ஒரு விவசாயி படுகாயம்.

மின்சார விபத்து

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வலையங்குளத்தில் வசிக்கும் கண்ணன் என்பவர் தனது ஆடுகளை வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீசிய காற்றினால் மின்சார கம்பி அறுந்து விழுந்தது. இந்நிலையில் கீழே கிடந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி அவருடைய 2 ஆடுகள் உயிரிழந்தன.

கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியை சேர்ந்த விவசாயி சுப்பையா என்பவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள வயலில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும் போது உயர்மின் அழுத்த மின்வயர் திடீரென அறுந்து விழுந்தது. இந்நிலையில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த 2 ஆடுகள் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

மின்சாரம் தாக்கிய விவசாயி 

இதனை பார்த்த விவசாயி ஆடுகளை காப்பாற்ற முயற்ச்சி செய்துள்ளார். அப்போது ஆட்டின் உரிமையாளர் சுப்பையாவை மின்சாரம் தாக்கியதில் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். இந்நிலையில், விவசாயியை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்