மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் காதல் விவகாரத்தில் பெற்ற மகளையே பீர் பாட்டிலால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தனது மனைவியோடு வசித்துவருவபர் முரளி (வயது 37 ). இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். முள்ளிப்பாளையம் அக்கறைகார தெருவில் வசித்துவரும் இவர்களின் மூத்தமகள் ராஜேஸ்வரி ப்ளஸ் 1 படித்துவருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக ஒருவரை காதலித்து வந்துள்ளார். இது மாணவியின் தந்தையான முரளிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, படிக்கும் வயதில் காதல் போன்ற விஷயத்தில் ஈடுபடவேண்டாம் என கூறிவந்துள்ளார். மேலும் படிப்பில் கவனம் செய்யுமாறு கூறிவந்துள்ளார்.
தந்தையின் பேச்சை துளியும் கேட்காத மாணவி தொடர்ந்து காதலித்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த முரளி தனது மகளை பீர் பாட்டிலால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராராஜி மருத்துவமனையில் சிகிச்சை ராஜேஸ்வரி பெற்றுவருகிறார். இதனையடுத்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரின் தந்தை முரளியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்ததற்காக பீர்பாட்டிலால் பெற்ற மகளை தந்தையே குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…