Erode News Today : ஈரோடு மாநகரில் இன்று அதிகாலை சொந்த அண்ணனை தம்பி அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன். இவருக்கு வயது 32. இவர் ஈரோடு மாநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்தார். இவருக்கும் இவரது தம்பிக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, அண்ணனை தம்பி ஓடஓட அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் தம்பியை கைது செய்துள்ளனர்.
அருண் பாண்டியனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், தம்பியிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையே அண்ணனை தம்பி அரிவாளால் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…