சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தை சேர்ந்த 16 மத்தள இசைக் கலைஞர்கள் இக்கரை நெகமன் புதூர் அம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வேன் மூலம் சத்தியமங்கலம் வந்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாரா விதமாக வேன் நிலைதடுமாறி ஜெயசக்தி மேடு என்ற இடத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் வந்துக் கொண்டிருந்து 16 பேரும் காயமடைந்தனர். வேன் கவிழ்ந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது, வழியிலேயே மத்தள கலைஞர் 18 வயதான சுக்கரன் என்பவர் உயிரிழந்துவிட்டார்.
மேலும் ஓட்டுநர் பிரபாகரன் லேசான காயத்துடன் உயிர்த்தப்பினார். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…