Erode latest news : ஈரோட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடி சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரபல ரவுடி கருவா மணி
ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் பிரபாகரன் என்ற வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் அடுத்த பி.பி. அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற கருவா மணி என்பவர் பிரபாகரனிடம் மது அருந்த 500 பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
வழக்கு பதிவு
இதனையடுத்து, பிரபாகரன் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருவா மணி கத்தியை காட்டி மிரட்டி பிரபாகரனிடம் இருந்து பணம் பறித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல்நிலையத்தில் பிரபாகரன் புகாரளித்தார். இதனடிபடையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கருவா மணியைத் தீவிரமாக தேடி வந்தனர்.
பல வழக்குகளில் தொடர்பு
இந்நிலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கருவாமணி சிக்கினார். இதனையடுத்து கருவாமணியிடம் போலிசார் நடத்திய தீவிர விசாரணையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கனி ராவுத்தர்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த வழக்கில் தொடர்புடையது தெரியவந்தது. கருவாமணி மீது மேலும் 2 வழக்குகள் என மொத்தம் 4 வழக்குகளில் தொடர்புடையதாக தெரியவந்துள்ளது.
கைது
இந்நிலையில், கருவாமணியிடம் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு கருவாமணியை ஈரோடு கிளை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…