Erode flash news : ஈரோடு மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிலேட்டர் நகர் பகுதியை சேர்ந்த மணிபாலன் என்பவரது இவரது மனைவி ஜெபகீதா தம்பதிகளுக்கு விஜய் பிரபு, ஜெயின் பிரபு என 2 மகன்கள் உள்ளனர்.
குடும்ப தகராறு
இந்நிலையில், மணிபாலன் பெருந்துறையில் செயல்பட்டு வரும் தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் அயனிங் மாஸ்டராக வேலை பார்த்து வருகின்றனர். பல நாட்களாக குடிப்பழக்கம் உள்ள தனது சம்பளத்தை வீட்டு செலவுக்கு தராமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் சம்பள பணம் தராமல் இருந்தது தொடர்பாக குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றியுள்ளது.
விஷம் குடித்து தற்கொலை
இதனையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற மணிபாலன் இரவு வீட்டுக்கு வந்த போது வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து, அவரது மனைவி விசாரித்ததில் தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
பலி
இத்தகவலை கேட்டி அதிர்ச்சியடைந்த ஜெபகீதா உடனடியாக அக்கம்பக்கத்தார் உதவியுடன் மணிபாலனை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி மணிபாலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…