Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகர் சூரி ரசிகர்கள் செய்த குளுகுளு சேவை..! கொண்டாடித் தீர்க்கும் மதுரை மக்கள்..!!

Saraswathi Updated:
நடிகர் சூரி ரசிகர்கள் செய்த குளுகுளு சேவை..! கொண்டாடித் தீர்க்கும் மதுரை மக்கள்..!!Representative Image.

மதுரை: மதுரையில் கோடை வெயிலில் தவிக்கும் மக்களின் தாகத்தை போக்கும் வகையில் நடிகர் சூரியின் ரசிகர்கள் நீர் மோர் பந்தல் அமைத்து குளிர்பானங்களை வழங்கிவருவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் நடிகர் சூரி, அண்மையில், இயக்குநர் வெற்றிமாறனின் "விடுதலை" திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாகவும் உருவெடுத்துள்ளார். மதுரையை சொந்த ஊராகக் கொண்ட நடிகர் சூரி, கொரோனா காலகட்டத்தில் இருந்தே பல்வேறு மக்கள் நலப் பணிகளை சத்தமின்றி செய்துவருகிறார். குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், சாதனை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். 

அவரைப் பின்பற்றி, நடிகர் சூரியின் ரசிகர்களும், அவரது நற்பணி மன்றம் மூலம் பல்வேறு சேவைகளை மேற்கொண்டுவருகின்றனர். அந்த வகையில்,  தற்பொழுது மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நடிகர் சூரியின் தலைமை நற்பணி மன்றம் சார்பில் மதுரை அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், வெயிலின் தாகத்தை மக்கள் தணித்துக்கொள்ளும் வகையில், தண்ணீர் , மோர் மற்றும் குளிர்பானங்களை சூரியின் ரசிகர்கள் வழங்கி வருகின்றனர். நடிகர் சூரி ரசிகர்களின் இந்த முன்னெடுப்பு மதுரை மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்