சென்னை அருகே பெற்ற மகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தந்தை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தாய் இருவரும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அருகே பெரம்பலூர் பகுதியில் இருக்கும் 20 வயது சிறுமி செம்பியம் உதவி கமிஷ்னரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் சுமார் 8 வருடங்களுக்கு மேலாக தனது தந்தை தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும் இது குறித்து தன்னுடைய தாயிடம் விஷயத்தை கூறிய போது, அவர் இதனை தட்டி கேட்காமல் என்னை கண்டபடி திட்டினார். பின்பு இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்து அந்த 20 வயது பெண்ணின் தந்தை மற்றும் தாய் இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…