மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் டெய்லர் காளிமுத்து. இவருக்கு 8 வயதில் தன்ஷிகா என்ற மகள் இருக்கிறாள். இவருடைய மனைவி பிரியதர்ஷினி பாத்திரக்கடை ஒன்றில் வேலைப்பார்த்து வந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி காளிமுத்து தனது மகள் தன்ஷிகாவுடன் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்றுள்ளார். இதையடுத்து வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்த பிரியதர்ஷினி கணவர், மகள் வீட்டில் இல்லாததால் கணவருக்கு ஃபோன் செய்துள்ளார். ஆனால், காளிமுத்து ஃபோன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனது கணவரையும், மகளையும் காணவில்லை என்று பிரியதர்ஷினி அதே பகுதியை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் புகாரை விசாரிக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், பிரியதர்ஷினியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் கூட உடனே போலீசாரின் உதவியுடன் வீட்டில் பரண் மீது இருந்த பக்கெட்டை கீழே இறக்கி பார்த்துள்ளனர்.
அதில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் சிறுமி தன்ஷிகா அழுகிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ந்து போயினர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் கணவர் காளிமுத்துவின் சந்தேகக் கொடுமை வெள்ளிச்சத்திற்கு வந்தது. மகள் பிறந்ததில் இருந்தெ அவளது பிறப்பில் சந்தேகம் பட்டு தகராறு செய்துவந்ததாகவும், மகளின் முக ஜாடை தன்னை போல இல்லை என்றும் கூறி துன்புறித்தி வந்துள்ளார்.
இதனையடுத்து, பிரியதர்ஷினி கொடுத்த புகாரின் பேரில் பிஞ்சு குழந்தையை கொன்ற அந்த கொலைகார தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…