Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Erode latest news : சென்னிமலை முருகன் கோவிலில் தீயணைப்பு ஒத்திகை பயிற்சி..!

Muthu Kumar May 27, 2022 & 17:30 [IST]
Erode latest news : சென்னிமலை முருகன் கோவிலில் தீயணைப்பு ஒத்திகை பயிற்சி..!Representative Image.

Erode latest news : ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் தீயணைப்பு துறை சார்பாக ஒத்திகை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை தீயணைப்பு மீட்பு பணி நிலையம் சார்பாக சென்னிமலை முருகன் கோவிலில் பணியாற்றும் இந்து சமய அறநிலை துறை பணியாளர்களுக்கு  சென்னிமலை  முருகன் கோவில் வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சிகள் நடைபெற்றது.  

சென்னிமலை தீயணைப்பு நிலைய அலுவலர் துரை தலைமையில் இந்த பயிற்சி வகுப்புகள் நடை பெற்றது. அதில், அவசர காலங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பொதுமக்களுக்கு இடையூறுமின்றி தீயை அணைப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், தீ விபத்துகள் ஏற்படாமல் எப்படி தடுப்பது போன்ற பயிற்சிகளை தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நடத்தி பயிற்சி கொடுத்தனர்.

மேலும், இந்த பயிற்சி வகுப்பில் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் உட்பட கோவிலில் பணியாற்றும் அணைவரும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்