Erode live news : தமிழகத்தில் பஞ்சு, நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜவுளித்துறையினர் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் ஜவுளி உற்பத்தியும் கடுமையாக பாதித்துள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, தே.மு.தி.க சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இன்று மாலை 4 மணி அளவில் ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே தேமுதிக சார்பில் பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…