Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னிமலையில் பால் குட ஊர்வலம்... குவிந்த பக்தர்கள்...

Muthu Kumar August 06, 2022 & 15:50 [IST]
சென்னிமலையில் பால் குட ஊர்வலம்... குவிந்த பக்தர்கள்...Representative Image.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சுப்பிரமணியன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் பாலாபிஷேக பெருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பெரும் தொற்றல் எளிமையாக நடைபெற்றது.

இந்நிலையில், இந்த ஆண்டு 55 -வது ஆண்டு பாலாபிஷேக விழாவை  சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக கோலாகலமாக நடைபெற்றது. 

ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் செய்திகளை அன்றாடம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள் 

அதன்படி, காலை 7:40 மணிக்கு 1610 பெண்கள் பால் குடங்களை எடுத்து ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் சென்னிமலை டவுன், கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் இருந்து புறப்பட்டு சென்னிமலை நகரில் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து மலைமீதுள்ள முருகன் கோவிலை சென்றடைந்தது.

இதனையடுத்து,  சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனையுடன் உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடந்தது. மேலும், பக்தர்கள் அனைவருக்கும் மலை மீது அன்னதானம் வழங்கப்பட்டது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்