Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Erode latest news : ஈரோடு முழுவதும் பலத்த மழை..? தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர்..!

Muthu Kumar May 28, 2022 & 11:35 [IST]
Erode latest news : ஈரோடு முழுவதும் பலத்த மழை..? தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர்..!Representative Image.

Erode latest news : ஈரோடு மாவட்டத்தில் மே மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள், குழந்தைகள் உட்பட பலர் அவதியடைந்தனர். இந்நிலையில் மே 2-ம் வாரம் முதல் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் அம்மாபேட்டை, தாளவாடி, பவானிசாகர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 

அக்னி நட்சத்திரம் முடியும் நிலையில், மாவட்டம் முழுவதும் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு பிறகு கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது.

அதன்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் அதிகபட்சமாக சென்னிமலையில் 55 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இந்த திடீர் மழையால் ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. 

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு சென்னிமலை-55, எலந்தகுட்டை52.8, நம்பியூர்-50, அம்மாபேட்டை-35, கோபி-22, பவானிசாகர்-19, மொடக்குறிச்சி-9, ஈரோடு-7, தாளவாடி-4.5, கவுந்தப்பாடி-4.2, வரட்டுப்பள்ளம்-3, குண்டேரிபள்ளம்-2 என மில்லி மீட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்