சென்னை அயனாவரம் மேட்டுத் தெருவில் வசித்து வரும் தம்பதியர் தம்புசாமி (53), பவானி (47). இந்த தம்பதிக்கு யுவஸ்ரீ (23) என்ற மகள் உள்ளார். தம்புசாமி பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பவானி அங்கு பிரியாணி சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு உறவினருடன் வந்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர் பவானியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். பவானியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தம்புசாமிக்கு, மனைவி பவானியின் இறப்பு செய்தி கிடைத்துள்ளது. விரைந்து சென்ற தம்புசாமியும், மகளும் மருத்துவமனையில் பவானியின் உடலை பார்த்து கதறி அழுதனர். அதன் பின்னர் தம்புசாமி அங்கிருந்து திடீரென்று காணாமல் போனதால், பயந்துப்போன யுவஸ்ரீ, அவரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதன் பின்னர் மகள், தனது தாய் பவானியின் உடலை உறவினர்கள் உதவியுடன் வீட்டிற்கு எடுத்த வந்த போது யுவஸ்ரீக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவி இறந்த துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாத தம்புசாமி, சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த யுவஸ்ரீ, ஒரே நேரத்தில் தாயையும், தந்தையையும் இழந்து கதறி அழுதார்.
இது குறித்து தகவல் அறிந்த அயனாவாரம் போலீசார் தம்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…