ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான கபடி போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கிளாசிக் லெவன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற இந்த கபடி போட்டியில் அந்தியூர் எம்எல்ஏ ஏ. ஜி. வெங்கடாசலம் தலைமை வகித்தார். மேலும், இந்த போட்டியில் ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 99 கபடி குழுவினர் கலந்த கொண்டனர்.
இதனையடுத்து, அந்தியூரில் நடைபெற்ற மாணவிகளுக்கான கபடிப் போட்டியில் அந்தியூர் மங்களம் கல்வி நிறுவனம் முதல் பரிசை வென்றுள்ளது. இவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சுழற் கோப்பை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கிராமப்புறங்களிலும் கபடி விளையாட்டை வளர்க்கவும், தேசிய அளவில் நடைபெறும் போட்ட்க்காக மாணவ, மாணவிகளைத் தயார் செய்வதற்காக இப்போட்டி நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…