ஈரோடு மாவட்டம் காட்டூர் பழமங்கலம் கிராமத்தை சேர்ந்த தமிழ்மணி எம்பவருக்கும், கருத்திபாளையம் பகுதியை சேர்ந்த ஜோதிமணி என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனையடுத்து, தமிழ்மணி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்மணி சொத்தின் ஒரு பகுதியை ஜோதிமணி வைத்துக்கொள்ள உத்தரவிட்டார்.
இதனையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதி அன்று ஜோதிமணி, தமிழ்மணியிடம் தன்னுடன் சேர்ந்து வாழவருமாறு அழைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மனைவியை தமிழ்மணி கீழே தள்ளிவிட்டார். இச்சம்பவத்தில் கீழே விழுந்த ஜோதிமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும், இந்த வழக்கு விசாத்த நீதிபதி மாலதி மனைவியை கொலை செய்த தமிழ்மணிக்கு ஆயுள் தண்டனையும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…