காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு 29 வயது. எம்.காம். பட்டதாரியான இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது தாய் மற்றும் சகோதரருடன் சென்னையில் தங்கி, அங்கு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், இவருக்கு கல்லூரி படிக்கும்போதே உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான யுவராணி (வயது 26) என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 6 வருங்களாக ஜெயராமனும், யுவராணியும் காதலித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த 22 ஆம் தேதி யுவராணி, ஜெயராமை பார்க்க பீர்க்கன்காரணையில் உள்ள ஜெயராம் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ஜெயராமனின் தாயும், சகோதரரும் வேலைக்கு சென்றுவிட்டதால் ஜெயராமன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். எனவே, இவர்கள் இருவரும் ஆன்லைனில் மதிய உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். பின்னர், இருவரும் வீட்டில் உள்ள ஃபேனில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சாயங்காலம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஜெயராமனின் தாயார், யுவராணியுடன் தனது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், இது குறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
விசாரணையில், காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் யுவராணியின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், கடந்த சில நாட்களாக யுவராணிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததால், மனமுடைந்த காதலர்கள் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
பல காரணங்களுக்காக தன் காதலன், காதலியையே கொடூரமாக கொன்று கொண்டிருக்கும் காலத்தில் இப்படியும் ஒரு காதல் ஜோடி. ஒன்றாக வாழதான் முடியவில்லை, ஒன்றாக சாகலாம் என்று நினைத்த காதல் ஜோடியின் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…