மதுரை மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதிக்கு அருகேயுள்ள கருமாத்தூர் செல்லும் பகுதியில் அழகுசிறை என்ற கிராமத்தில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக 5 பேர் பலியாகினர். அதனைத் தொடர்ந்து 13-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலை இருந்த இடம் தெரியாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, தீயணைப்புப் படையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். திடீரென ஏற்பட்ட இந்த பட்டாசு வெடிவிபத்தால், அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்து, நிதியுதவி வழங்க அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
அதன் படி, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, ஆறுதல் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…