சமீபத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதற்காக, நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான பணி நடந்து வருகிறது.
அதன் படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, பவானி சாகர் போன்ற எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும், இந்த வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதன் படி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வீடு வீடாகச் சென்று வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த பணி விடுமுறை நாள்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு, தற்போது வரை, மொத்தம் 4 லட்சத்து 22 ஆயிரம் பேரின் ஆதார் எண் விவரங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி..? முழுத் தகவல்கள் இங்கே…
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…