Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பவானியில் வீட்டை சூழ்ந்த வெள்ளம்... அப்பகுதி பெண்ணிடம் நிலவரத்தை கேட்ட முதல்வர்...

Muthu Kumar August 06, 2022 & 14:50 [IST]
பவானியில் வீட்டை சூழ்ந்த வெள்ளம்... அப்பகுதி பெண்ணிடம் நிலவரத்தை கேட்ட முதல்வர்...Representative Image.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி ஆகிய பகுதியில் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால், 369 குடும்பங்களைச் சேர்ந்த 1,277 பேர் 14 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து, பவானி கந்தன் நகர், காவிரி நகர், பாலா கேஸ் குடோன் பகுதியைச் சேர்ந்த 60 குடும்பங்களை 173 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த முகாம்களில் தங்கியவர்களுக்கு தேவையான உதவிகளை தாசில்தார் சரவணன் செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு அந்த முகாமை பார்வையிட சென்ற கலெக்டர் கிருஷ்ணனுண்ணியை செல்போன் மூலம் முதலமைச்சர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, பவானி கந்தன் பட்டறை பகுதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஜெயசுதா என்ற பெண்ணிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் செய்திகளை அன்றாடம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள் 

மேலும் அப்பெண்ணிடம் முகாமில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்ந்தார். மேலும் அவர்களுக்கு என்ன வசதிகள் வேண்டும் என்றாலும் கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்