ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பூந்துறைசேமூrரில் வசித்து வருபவர் கோமதி. இவர் தனது 4 வயது குழந்தை சுருதியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது பட்டறை வேலம்பாளையம் அருகே சென்றபோது அவர்களுக்கு முன்னே கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயற்சித்துள்ளார்.
அப்போது எதிர் திசையில் வந்த வாகனம் தங்கள் மீது மோதிவிடுமோ என்ற அச்சத்தில் நிலை தடுமாறியுள்ளார். அப்போது டிராக்டரின் இடையே கீழே விழுந்தபோது சக்கரம் தாய் மீதும் மகள் மீதும் எறியுள்ளது. இதனால் சம்பவ இடத்தியேயே இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி போலீசார், உடல்களை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சாலை விபத்தில் கரும்பு டிராக்டர் மோதி 4 வயது குழந்தையும், அவரது தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…