Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Erode latest news : ஈரோட்டில் வேலைநிறுத்தம்... மீண்டும் இயங்க தொடங்கிய விசைத்தறிகள்...

Muthu Kumar July 11, 2022 & 13:40 [IST]
Erode latest news : ஈரோட்டில் வேலைநிறுத்தம்... மீண்டும் இயங்க தொடங்கிய விசைத்தறிகள்...Representative Image.

Erode latest news : ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், மாணிக்கம் பாளையம், லக்காபுரம், சித்தோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், இந்த 50 ஆயிரம் விசைத்தறிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் மட்டும் ரயான் துணி உற்பத்தி நடந்து வருகிறது. அதன்படி, தினமும் 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி நடந்து வந்தது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள அணைத்து மார்க்கெட்டிலும் ரயான் துணி உற்பத்தி செய்த விலையை விட குறைவான விலைக்கு விற்பனையானது. இதனால் ரயான் துணி தயாரித்த விசைத்தறியாளர்களுக்கு ஒரு மீட்டருக்கு 3ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த 3-ந் தேதி முதல் ரயான் துணி உற்பத்தியை நிறுத்தி விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈரோடு மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் விசைத்தறிகள் மூடப்பட்டன.

இதனைதொடர்ந்து, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கைத்தறி துறை அமைச்சரை சந்தித்தனர். இந்த சந்திப்பில் முதற்கட்டமாக வேட்டி தயாரிப்பு அனுமதி வழங்குவதாக அமைச்சர் உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டனர்.

இதனையடுத்து, ஈரோடு மாவட்டம் முழுவதும் நடந்த 8 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்குப் பிறகு இன்று மீண்டும் விசைத்தறிகள் செயல்பட தொடங்கியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்