Madurai Latest News : மதுரை மாவட்டம் மேலூர் அருகே குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் தற்கொலை.
மேலூர் அருகே குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகராறு
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கத்தப்பட்டியில் நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமாருக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
தற்கொலை
நேற்று இருவருக்கும் இடையே சண்டை முற்றியதால் மனவேதனை அடைந்த நித்யா, அவரது குழந்தைகளான ரக்சனா, சுந்தரி ஆகிய இருவரையும் அப்பகுதியில் உள்ள கிணற்றில் வீசியுள்ளார். இதனையடுத்து தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மீட்பு பணி
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மேலூர் காவல்நிலைய காவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து மோட்டார் மூலம் கிணற்று தண்ணீரை வெளியேற்றினர். மேலும், சம்பவ இடத்துக்கு மேலூர் ஆர்.டி.ஓ. பிர்தவுஸ்பாத்திமா வந்தார்.
தண்ணீர் முழுவதும் வெளியேற்றிய தீயணைப்பு படையினர் கிணற்றில் இறங்கி நித்யா மற்றும் 2 குழந்தைகளின் உடல்களை மீட்டனர். மேலும் 3 பேரின் உடல்களும் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…