Madurai Latest News : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காரில் சென்ற தாத்தா, பேரன் என இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எஸ்.புளியங்குளத்தை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் குருநாதன் கப்பலூர் சிவன் நகரில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை பாண்டி, கப்பலூரில் உள்ள தனது மகன் சென்றுள்ளார். பின் அங்கிருந்து தனது பேரன் யஸ்வந்த்தை இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது புதூர்விலக்கு பகுதியில் கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
பலி
இச்சம்பவத்தில், பாண்டி மற்றும் அவரது பேரன் யஸ்வந்த் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் பாய்ந்தது.
இந்த காரை ஓட்டி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மற்றும் அவரது நண்பரான ஜெகதீஷ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
வழக்குப்பதிவு
இந்த விபத்தில் பலியானவர்களின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணை
விசாரணையில் காரை ஓட்டி வந்த கண்ணன் மதுரையில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் நகைக்கடையின் காரை எடுத்துக்கொண்டு தனது நண்பன் ஜெகதீஷ் உடன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…