Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Karur District News : இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்..!

Muthu Kumar June 25, 2022 & 13:15 [IST]
Karur District News : இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்..!Representative Image.

Karur District News : கரூர் மாவட்டத்தில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்துள்ளார்.

கரூர் மாவட்டம் பண்டரிநாதன் நாதன் கோயில் சன்னதி தெருவில் வசித்து வரும் சக்திவேல் என்பவர் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தினை நிறுத்தி வைத்து விட்டு பின் தூங்க சென்றுள்ளார். இந்நிலையில், திடீரென்று வந்த மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி அவரது வாகனத்தில் வைத்து தீ வைத்து சென்றுள்ளார். 

இந்நிலையில், அந்த மர்ம நபர் எதற்காக தீ வைத்தார், இது முன்பகை காரணமா போன்ற காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பான  சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. 

இதனையடுத்து, கரூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து வாகன கண்காணிப்பு குறித்தும், புதிதாக பொறுப்பேற்றுள்ள கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் இது போன்ற சம்பவம் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில் மர்மநபர்கள் 2 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடியது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்