காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்காவை சேர்ந்தவர்கள் சந்திரன்- ரேவதி தம்பதியினர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இருளர் இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக ரேவதி கர்ப்பம் தரித்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் ரேவதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிகிறது.
பிரசவ வலியால் துடித்த ரேவதியை அருகில் உள்ள களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவர் சரண்ராஜ், செவிலியர் பிருந்தா ஆகியோர் ரேவதிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது காலை 10.15மணியளவில் ரேவதிக்கு அழகான ஆண் குழந்தை 2.9 கிலோ எடையுடன் சுகபிரசவத்தில் பிறந்துள்ளது.
பொதுவாகக் குழந்தை பிறந்தவுடன் முதலில் அழுகவே செய்யும். சொல்லப்போனால் பிறந்தவுடன் நிச்சயம் குழந்தை அழுக வேண்டும்.. இல்லையென்றால் தான் பிரச்சினை என்பது மருத்துவர்களின் கருத்து. அழுக மட்டுமே செய்யும் குழந்தை, நன்கு பேசக் குறைந்தது சில ஆண்டுகள் ஆகிவிடும்.
ஆனால், இந்த குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த உடன் திடீரென "நான் வெளியே வந்துவிட்டேன்" என்ற குரலை மருத்துவர்கள், செவிலியர்கள் கேட்டுள்ளனர். பலரும் எங்கிருந்து இந்த சத்தம் வந்தது என தேடி குழந்தை தான் கூறியது என்பதை உறுதி செய்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், செவிலியர்கள், குழந்தையின் தாய், தூய்மை பணியாளர் என பலரும் ஒருவருக்கொருவர் எப்படி சாத்தியம் என கேட்டு கொண்டனர்.
இந்த செய்தி தீயாய் பரவ பலரும் அந்த குழந்தையை வியப்புடன் வந்து பார்த்து செல்கின்றனர். ஆனால் அந்த குழந்தை அதற்கு பிறகு பேசவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தச் சம்பவம் இணையத்திலும் பெரியளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இருப்பினும், பிறந்தவுடன் இப்படி குழந்தை பேச வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் ஒருபக்கம் மறுக்கிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…