சென்னையில் இருந்து தன்பாத்திற்கு முன்பதிவில்லா பயணிகள் ரயில் இன்று இயக்கப்படுகிறது. பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வேயின் சென்னை மண்டலம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை வியாசர்பாடி ரயில் நிலையத்தில் நேற்று மாலை மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென பயங்கர கரும்புகை கிளம்பியது. இதனால், அச்சமடைந்த பயணிகள், ரயிலில் கீழே குதித்து அங்கிருந்து ஓடினர். இந்த சம்பவத்தில் பாதிப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், லோகோ மற்றும் பவர்கார் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே கரும்புகை கிளம்பியதாக ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கோளாறுகள் சரிசெய்யப்பட்டு இரவு 7.15 மணி அளவில் அந்த ரயில் மீண்டும் புறப்பட்டது.
இந்நிலையில், பயணிகள் நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தன்பாத்-திற்கு சிறப்பு முன்பதிவில்லா பயணிகள் ரயில் இன்று இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ரயிலானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 11 மணிக்கு புறப்படுகிறது. 26ம் தேதி காலை 8 மணிக்கு இந்த ரயில் தன்பாத் சென்றடையும். இந்த ரயிலில் 22 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் மற்றும் 2 லக்கேஜ் மற்றும் பிரேக் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வேயின் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…