Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அந்தியூரில் வடமாநில பெண் தற்கொலை..! காரணம் என்ன..?

Muthu Kumar August 02, 2022 & 15:30 [IST]
அந்தியூரில் வடமாநில பெண் தற்கொலை..! காரணம் என்ன..?Representative Image.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

மேற்கு வங்காளம், சோனக்கூர் பகுதியை சேர்ந்த ஒபர்னாசிங் என்பவரது கணவர் திலிப் சிங் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவரது மூன்று மகள்களும் மேற்குவங்கத்தில் உள்ளனர். 

இந்நிலையில், மேற்கு வங்த்தை சேர்ந்த ஜெந்துசிங்  என்பவருடன் கடந்த 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செங்கல் சூளையில் இருவரும் வேலை சேர்ந்து அப்பகுதியில் வசித்து வந்துள்ளனர். 

இதனையடுத்து, நேற்று இரவு ஒபர்னாசிங் மகள்களுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் ஜெந்துசிங்கிடன் 15 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். ஜெந்துசிங் தற்போது பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த நிலையில் ஒபர்னாசிங் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் செய்திகளை அன்றாடம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் குழுவில் இணையுங்கள்

மேலும், இதுகுறித்து தகவலறிந்து வந்த அந்தியூர் காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்