தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில், 2022 - 23 ஆம் நிதியாண்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, பயனாளிகளை தேர்ந்தெடுக்கும் பணியில், வட்டார அலுவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில், பயனடைய விரும்பும் விவசாயிகள், இணைய தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம்.
அதன்படி, http://tnhorticulture.tn.gov.in/tn.hortnet/ என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையத்தில் விண்ணப்பிக்க முடியாத விவசாயிகள், வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி, பதிவு செய்துக் கொள்ளலாம். இணையத்தில் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே திட்ட பயன் வழங்கப்படும் என்று தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்து விரைவில் தங்களது பதிவுகளை செய்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…