Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

+1ம் வகுப்பில் ஒரு மாணவி மட்டுமே சேர்க்கை - உசிலம்பட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அவலம்!

Abhinesh A.R Updated:
+1ம் வகுப்பில் ஒரு மாணவி மட்டுமே சேர்க்கை - உசிலம்பட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அவலம்!Representative Image.

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை வகுப்பில் மாணவிகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டாததால், ஒரே ஒரு மாணவி மட்டுமே சேர்ந்துள்ளார்.  

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெண்கள் கல்வி பயில அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாததால் பெற்றோர்கள், தனியார் பள்ளிகளிலேயே சேர்ந்து பயின்றுவந்தனர். இதனால், உசிலம்பட்டியில் மாணவிகள் கல்வி பயில அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டுமென நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, கடந்த 2 வருடத்திற்கு முன் உசிலம்பட்டியில் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.இதனையடுத்து மாணவிகளின் சேர்க்கையை பொறுத்து புதிதாக பள்ளிக்கட்டிடம் கட்டப்படும் என்றும், அதுவரை தற்காலிகமாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலேயே இடம் ஒதுக்கப்பட்டு கடந்த கல்வி ஆண்டு முதல் அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு இருபாலர் மேல்நிலைப்பள்ளியாக செயல்படத் தொடங்கியது.

கடந்த ஆண்டில் 14 மாணவிகள் பள்ளியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றுச் சென்ற நிலையில், இந்த வருடத்தில் 15 மாணவிகள் சேர்ந்துள்ளனர். அதாவது, நடப்பு கல்வியாண்டில், புதிதாக 1 மாணவி மட்டுமே பள்ளியில் சேர்ந்துள்ளார். அரசுப்பள்ளியில் படித்தால் சலுகைகள் பல உண்டு என்றாலும், பெற்றோர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளை சேர்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்