Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மதுபோதையில் மயங்கி விழுந்து.. மரணமடைந்த பெயிண்டர்.. பெருந்துறையில் சோகம்!!

Sekar August 10, 2022 & 12:37 [IST]
மதுபோதையில் மயங்கி விழுந்து.. மரணமடைந்த பெயிண்டர்.. பெருந்துறையில் சோகம்!!Representative Image.

பெருந்துறை பகுதியில் மதுபோதை உச்சமாகி மயங்கி சரிந்த பெயிண்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 47 வயதான பெயிண்டர் ரவிச்சந்திரன் என்பவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அதனால் உடல்நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பெயிண்டிங் வேலை செய்ததற்காக பாக்கி கூலியை வாங்கிக் கொண்டு வருவதற்காக பெருந்துறை சென்ற ரவிச்சந்திரன், அளவுக்கு அதிகமாக மது குடித்து, பெருந்துறை அண்ணா சிலை பகுதியில் ரோட்டோரத்தில் மயங்கி சரிந்துள்ளார். 

வீட்டை விட்டுச் சென்ற கணவர் வெகுநேரமாகியும் திரும்பாததால், அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கணவருக்கு போன் செய்துள்ளார். அப்போது கணவர் மயங்கி கிடந்த இடத்தின் அருகில் இருந்தவர்கள் போனை எடுத்து, அவர் மயங்கி கிடப்பதை கூறியுள்ளனர். 

இதையடுத்து அவரது மனைவி உறவினர்களுடன் வந்து பார்த்தபோது, கணவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து, உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்நிலையில், சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்