திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் பலர் தமிழக தொழிலாளர்களை தாக்கியதாக கூறப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் அருகே உள்ள திலகர் நகர் பகுதியில், வட மாநில தொழிலாளர்கள் பலர், தமிழக தொழிலாளர்களை தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் புகைக்கும் போது ஏற்பட்ட தகராறால், இந்த மோதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திலகர் நகர் பகுதியில் நேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து வட மாநில தொழிலாளர்களின் அடவாடியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இதற்கிடையே, அடாவடியில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக தொழிலாளர்கள் பலர் ஒன்று திரண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…