திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்ணின் சடலம் முட்புதரில் ரத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. யார் இந்த பெண்? (Pollachi Women Dead Body Found) இந்த குற்றத்தின் பின்னணி என்ன? பாலியல் வன்கொடுமையா..? எனப் பல கோணத்தில் போலீஸார் விசாரணை செய்கின்றனர்.
நடந்தது என்ன? (Pollachi Women Dead Body Found)
பொள்ளாச்சி அருகே சீலக்காம்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் ஆவார். இவருக்கு நாகவேணி என்ற மனைவி, 1 மகள், 1 மகன் உள்ளனர். இவரின் மனைவி நாகவேணி தினமும் மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து செல்வது வழக்கம். நேற்று வழக்கம்போல புதுப்பாளையத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். மாலையில் மாடுகள் மட்டும் வீடு திரும்பிய நிலையில் நாகவேணி வீடு திரும்பவில்லை.
இதனால் உறவினர்களின் உதவியுடன் அக்கம்பக்கம் தேடியுள்ளனர். ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் முட்புதரில் ரத்த காயங்களுடன் நாகவேனி சடலமாக இருந்து உள்ளார். உடனே, கோமங்கலம் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
மேலும், இந்த குற்றம் நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு, பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்ட பகுதிக்குள் நடந்தாலும், இரு மாவட்ட எல்லை பகுதியாக இருப்பதால் இரு மாவட்ட காவல்துறையும் குற்றத்தில் ஈடுபட்டவர்களை தேடுகிறது என்றார். இந்த குற்றம் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நடந்து இருப்பதால் அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகின்றன. ஆனால், பகலில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டது கிராம மக்கள் மத்தியில் பயத்தை விதைத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…