Erode flash news : ஈரோட்டுல் பிளஸ்-2 மாணவி காணமல் போன சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாணவி
ஈரோடு காசிபாளையம் பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது மகள் மேஷியா காசி பாளையம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்து வீட்டில் இருந்து வருகிறார்.
காணவில்லை
இந்நிலையில் நேற்று இரவு தனது பாட்டியுடன் மேஷியா வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். இதனையடுத்து அதிகாலையில் பார்த்த போது இறவு தூங்கிய மேஷியாவை காண வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியுள்ளர். ஆனால், அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.
வழக்கு பதிவு
இந்நிலையில், இது குறித்து அந்த மாண்வியின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…