Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கஞ்சா கேக், கஞ்சா சாக்லேட்.. சென்னையை ஆட்டுவிக்கும் போதைப்பொருள்!!

Sekar September 18, 2022 & 18:39 [IST]
கஞ்சா கேக், கஞ்சா சாக்லேட்.. சென்னையை ஆட்டுவிக்கும் போதைப்பொருள்!!Representative Image.

சென்னையில் சாக்லேட் மற்றும் கேக்கில் கஞ்சா கலந்து விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

தமிழகத்தில் போதை கலாச்சாரம் பெருகி வரும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே ஆபரேஷன் கஞ்சா என்ற பெயரில் போலீசார் தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையாளர்களை கைது செய்ததுடன், டன் கணக்கிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தது.

இந்நிலையில், கெடுபிடி அதிகரித்துள்ளதால் தற்போது கஞ்சாவை நேரடியாக விற்காமல் மற்ற உணவு பொருட்களுடன் கலந்து விற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த வகையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா கேக் என்ற புதிய வகை போதை பொருளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அங்கு உணவகம் நடத்தி வரும் ரோஷன் என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், தாமஸ் என்ற மற்றொரு நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கொள்முதல் செய்து, அதை கலந்து போதை கேக் தயாரித்து ரூ.3000 வரை விற்பனை செய்து வந்ததாக கூறியுள்ளனர். மேலும் டாட்டூ கடை நடத்தி வரும் தாமஸ், போதை மருந்து கலந்த போதை ஸ்டாம்புகளை வாடிக்கையாளர்களுக்கு விற்றுவந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேரடி கஞ்சா விற்பனை போய், இப்படி மறைமுகமாக கஞ்சா விற்பனை நடத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்