போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றி தலைக்கவசம் அணிந்தவரும் நபர்களுக்கு கூல்ட்ரிங்ஸ் மற்றும் தொப்பி ஆகியவற்றை பரிசாக வழங்கிய போலீசார்.
மதுரை மாநகர போக்குவரத்து காவலர்கள் சார்பாக வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகள் தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம், விரகனூர் மற்றும் விமானநிலையம் செல்லும் சாலையில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பகுதி அருகே மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து முறையாக தலைக்கவசம் அணிந்து போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனம் ஒட்டியவர்களுக்கு கோடைகாலத்தில் குளுர்ச்சியூட்டும் விதமாக கூல்ட்ரிங்ஸ் மற்றும் தொப்பி ஆகியவை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பரிசாக வழங்கினர்.
மேலும் இருசக்கர வாகனத்தில் பின்னல் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும், மதுபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது எனவும் கூறினர். அவ்வாறு விதிகளை பின்பற்றினால் விபத்துகள் நிகழ்ந்தாலும் பெருமளவில் சேதங்கள் தவிர்க்கப்படும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…