Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Madurai Latest News : பரபரப்பு... மேயரின் வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!

Muthu Kumar May 26, 2022 & 17:23 [IST]
Madurai Latest News : பரபரப்பு... மேயரின் வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!Representative Image.

Madurai Latest News : மதுரை மேயரின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பங்குன்றத்தில் தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் 25 லட்சம் மதிப்பீட்டில் நல்வாழ்வு மையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மதுரை மண்டலத் தலைவர் சுவிதா விமல் தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பூமி பூஜையை தொடக்கி வைத்தார். இந்நிலையில், அப்பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட கழிப்பறை பல ஆண்டுகளாக பூட்டி கிடப்பதால் அதனை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகிதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் குடிநீர், சாலை வசதிகள் இல்லை எனவும் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற கோரிக்கையை முன் வைத்து மதுரை மேயர் இந்திராணி வாகனத்தை வழி மறித்து முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, அவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்