Erode latest news : சத்தியமங்கலம் அருகே பாம்பு கடித்து விவசாயி பலியானார்.
சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூர், மேட சின்னனூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவரது மனைவி பூங்கொடி இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளனர்.
பாம்பு கடி
இந்நிலையில், வாழை தோட்டத்திற்கு ஈஸ்வரமூர்த்தி அதே ஊரை சேர்ந்த 2 பேருடன் சென்று வாழை இலையை அறுக்கும் பணியில் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக ஈஸ்வரமூர்த்தியை பாம்பு கடித்து விட்டது.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உடன் இருந்தவர்கள் ஈஸ்வரமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்..
பலி
கோவை மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஈஸ்வரமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…