தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட புதுமைப் பெண் திட்டத்தில், மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை செப்டம்பர் 5 ஆம் நாள், முதலமைச்சர் அவர்கள் சென்னையில் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கலந்து கொண்டு, இத்திட்டத்தின் முதற்கட்டமாக 17 கல்லூரிகளைச் சேர்ந்த 872 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் Vault வழங்கினார்.
அதன் படி, இந்த திட்டம் 8,10, மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படித்து பின்னர், உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்குப் பொருந்தக் கூடியவை ஆகும். இவ்வாறு இத்திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 6,282 கல்லூரி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான உதவித் தொகை வங்கியில் வரவு வைக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களாக இருக்க வேண்டும். அல்லது தனியார் பள்ளியில், கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று, பின் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளாக இருக்க வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…