சங்ககிரி வைகுந்தம் அருகே இருசக்கர வாகனம் மீது கான்கிரீட் ரெடிமிக்ஸர் வாகனம் மோதிய விபத்தில் மனைவி கண்ணெதிரே கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட வைகுந்தம் கிராமத்தைச்சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் பெருமாள் தனது மனைவி வேடக்காவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
கொங்கணாபுரத்திலிருந்து வைகுந்தம் கிராமத்தை நோக்கி செல்லியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது எதிரே வந்த கான்கிரீட் கலவை மிக்சர் லாரி எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதி மனைவி வேடக்கா கண்ணெதிரே கணவன் பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படுகாயமடைந்த வேடக்கா சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகவலறிந்த சங்ககிரி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பெருமாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலை விபத்தில் மனைவி கண்ணெதிரே கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…