Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொழிலாளி மரணம்.. முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு அறிவிப்பு!!

Sekar June 04, 2022 & 10:45 [IST]
தொழிலாளி மரணம்.. முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு அறிவிப்பு!!Representative Image.

Madurai News Today : மதுரை மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த கூலித் தொழிலாளி குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் விளாங்குடி கிராமத்தின் ராமமூர்த்தி நகர் மெயின் வீதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்து பணியில் ஈடுபட்டிருந்த சதீஷ் எனும் 34 வயது இளைஞர் பலியானார்.

இது குறித்து தகவலறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணை அடிப்படையில் சதீஷ் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார். மேலும் அமைப்பு சாரா கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய நிதியத்தில் இருந்தும் ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் சதீஷ் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் மொத்தமாக ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்