Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Erode latest news : ஈரோட்டில் 52 டன் காய்கறிகள் விற்பனை..!

Muthu Kumar June 13, 2022 & 16:50 [IST]
Erode latest news : ஈரோட்டில் 52 டன் காய்கறிகள் விற்பனை..!Representative Image.

Erode latest news : ஈரோடு மாவட்டம் சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளை பல்வேறு பகுதிகளில் இருந்து நேரடியாக உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். பொது மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறி விலை மலிவாக கிடைப்பதால் மக்களும் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று வைகாசி விசாகம் மற்றும் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளிலும் வழக்கத்தைவிட விவசாயிகள் அதிகளவில் காய்கறிகளை விற்பனை செய்தனர். மேலும் இந்த 5 உழவர் சந்தையிலும் அதிகாலை முதலே காய்கறிகளை வாங்க மக்கள் குவிந்தனர்.

இதனையடுத்து 5 உழவர் சந்தைகளி 52.29 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், இதன் மதிப்பு ருபாய் 14,87,000 எனவும் தெரிவிட்த்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்