கரூர் - சேலம் மற்றும் சேலம் - கரூர் வழித்தடத்தில் நாமக்கல் வழியாக முன்பதிவில்லா பயணிகள் ரெயில்கள் தினசரி இருமுறை இயக்கப்படுகிறது.
சேலம் - ஈரோடு வழித்தடத்தில் தண்டவாள மேம்பாடு மற்றும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் இன்றும் நாளையும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதையொட்டி சேலம் - கரூர், கரூர் - சேலம் இடையே இரு மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் இன்று (20-ந் தேதி) மற்றும் நாளை (21-ந்தேதி) ஆகிய 2 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
இதன் காரணமாக கோவை - சேலம் ரயில் (வண்டி எண். 06802) , கோவையில் இருந்து புறப்பட்டு, ஈரோடு வரை செப்டம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் பகுதியாக மட்டும் இயக்கப்படும். ஈரோடு - சேலம் இடையே இந்த ரயில் இயக்கப்படாது.
அதுபோல் சேலம் - கோவை ரயில் (வண்டி எண். 06803) ஈரோட்டில் இருந்து புறப்பட்டு, கோவை சென்றடையும். சேலம் - ஈரோடு இடையே இயக்கப்படாது. இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…