மேட்டூர் அருகே நடுரோட்டில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இருந்து பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகள் உட்பட 43 பேருடன் ஆம்னி பஸ் ஒன்று பெங்களூரு நோக்கி நேற்று இரவு புறப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் சேலம் மேட்டூர் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, எஞ்சினில் இருந்து புகைபுகையாக வந்துள்ளது.
இதை கண்டு சுதாரித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றியுள்ளார். எனினும் பயணிகள் இறங்கிக் கொண்டிருக்கும்போதே, தீ மளமளவென பரவ ஆரம்பித்துள்ளது.
இதனால் பேருந்தில் பயணித்த 8 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் தீயை அணைத்தனர்.
மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…